ஆன்மிக களஞ்சியம்

பணத்தேவையை நிறைவேற்றும் யோக பைரவர்

Published On 2024-04-13 11:03 GMT   |   Update On 2024-04-13 11:03 GMT
  • பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.
  • அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

ஐந்து இதன் தேவரகசியம் யாதெனில், ஐந்து எண்ணிக்கையில் சப்தமு கீருத்ராட்சத்தை வடக்கு முகமாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச உபசாரங்கள் செய்து யோக பைரவ மூல மந்திரத்தால் ஹோமம் செய்து கடையில் வைக்க வியாபாரத்தில் செழிப்பும் முன்னேற்றத் தகவல்களும் வரக்காணலாம்.

இன்றைக்குச் சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பாக ஆதிசைவ சிவாச்சாரியார்கள் என்ற பிரிவினர் பலர் பைரவ ஆராதனையில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள்.

அவர்கள் செய்த பைரவ உபாசனையின் பலனாகயாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் சைவக் கோவில்களைத் தன்னாட்சி அமைப்பு போன்றே நடத்தி வந்துள்ளனர்.

பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது ஒரு செப்புத் தகட்டை எடுத்து யோக பைரவ ஸ்வர்ண பைரவ மந்திரத்தை ஜெபித்து பைரவரது பாதத்தில் வைத்து விட்டுச் செல்வர்.

மறுநாள் கதவைத் திறந்து அந்த செப்புத்தகட்டைப் பார்த்தால் அது தங்கத் தடமாக மாறி இருக்கும்.

அதைக் கொண்டு அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர் என்று காலச் செய்தி உள்ளது.

பைரவரை வழிபடும் சிவனடியார்களை அரசர்கள் இவர்கள் வலிமை அறிந்து துன்புறுத்த மாட்டார்கள்.

அவர்களும் அரசனுக்குப் பயப்படமாட்டார்கள்.

Tags:    

Similar News