ஆன்மிக களஞ்சியம்

மகன், மகளுக்காக பெற்றோரே பரிகாரம் செய்யலாம்

Published On 2024-01-13 12:41 GMT   |   Update On 2024-01-13 12:41 GMT
  • அவர்களுக்காக பெற்றோர் அல்லது உறவினர்கள் கூட வந்து பரிகார பூஜையை செய்யலாம்.
  • யாருக்கு திருமணம் செய்ய வேண்டுமோ அவர்களது பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்யலாம்.

திருமண வயதில் உள்ள சிலர் தொழில் அல்லது வேலை நிமித்தம் தமிழ்நாட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கலாம், சிலர் வெளிநாடுகளில் இருக்கக்கூடும்.

அவர்களால் எளிதாக திருமணஞ்சேரி தலத்துக்கு வந்து பரிகார பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலை இருக்கலாம்.

அத்தைகையவர்கள் கவலைப்பட தேவை இல்லை.

அவர்களுக்காக பெற்றோர் அல்லது உறவினர்கள் கூட வந்து பரிகார பூஜையை செய்யலாம்.

யாருக்கு திருமணம் செய்ய வேண்டுமோ அவர்களது பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்யலாம்.

வீடு திரும்பியதும் அர்ச்சனை பையில் உள்ள பொருட்களை யார் பெயருக்கு பூஜை செய்தோமோ, அவர்களிடம் கொடுத்து பயன்படுத்த சொல்லலாம்.

Tags:    

Similar News