ஆன்மிக களஞ்சியம்

குழந்தை பாக்கியம் வேண்டுமா?

Published On 2024-02-03 12:26 GMT   |   Update On 2024-02-03 12:26 GMT
  • குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
  • முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

குழந்தை பாக்கியம் வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

போகாத ஆஸ்பத்திரி இல்லை, போகாத கோவில் இல்லை என்று அவர்கள் மத்தியில் மிகுந்த சலிப்பு இருக்கும்.

ஆனால் ஆலய வழிபாடு செய்தாலும் முறைப்படி செய்தோமா? என்று யோசிக்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

ஜாதக ரீதியில் குழந்தை பாக்கியம் தருபவர் முருகன்தான்.

சித்தர்காடு தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் குழந்தை பாக்கியத்திற்காக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்பதிகளாக வரவேண்டும்.

பசும்பால், பன்னீர், செவ்வரளி பூக்கள் கொண்டு வரவேண்டும்.

பால் அரை லிட்டர், பன்னீர் தேவையான அளவு, நிறைய செவ்வரளி பூக்கள் எடுத்து வரலாம்.

வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 2 லிட்டர் பால் வாங்கி கொடுக்கலாம்.

இன்னும் வசதி இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

விருப்பம் இருப்பவர்கள் வஸ்திரம் எடுத்தும் முருகப்பெருமானுக்கு அணிவித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

செவ்வரளி பூ வாங்கும்போது ரத்த சிவப்பில் உள்ள பூக்களை வாங்க வேண்டும்.

சுமார் ஒருமணி நேரம் இந்த பரிகார பூஜை நடத்தப்படும். மறக்காமல் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் போன்றவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News