ஆன்மிக களஞ்சியம்

கோமாதாவை தினம் வழிபடுவது எப்படி?

Published On 2023-12-30 12:41 GMT   |   Update On 2023-12-30 12:41 GMT
  • கிரகலட்சனம் கோ சம்ரட்சணம் என்று சொல்வழக்கே உண்டு.
  • சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லம் கலந்த கலவையும் அகத்திக்கீரையும் கொடுக்க வேண்டும்.

கோமாதாவை வேத முறைப்படி வழிபட்டால் அரசனுக்கு ஒப்பான யோக பாக்யங்களோடு இந்த உலகில் வாழ முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

கிரகலட்சனம் கோ சம்ரட்சணம் என்று சொல்வழக்கே உண்டு.

திருமகள் வடிவாகவும், தெய்வங்களை உடலில் வைத்துக்கொண்டும் உயிரினமாகிய பசுவை சுத்தமான இடத்தில்

நிற்க வைத்து மஞ்சளும் பச்சகல்பூரமும் கலந்த நீரால் குளிப்பாட்டி பச்சை அல்லது மஞ்சள் வஸ்திரம் உடுத்தி

கொம்புகளில் மஞ்சள் பூசி உடலெங்கும் பொட்டுகளை வைத்து கதம்ப மாலை சாற்றி முதலில் விநாயகர் வணக்கம் சாணத்தில் செய்ய வேண்டும்.

பிறகு ஸ்ரீசுக்த மந்திரங்களைக்கூறி அல்லது கேசட்டில் ஒலிக்க விட்டு லட்சுமி அஷ்டோத்தித அர்ச்சணையும் சொல்லிவழிபடல் வேண்டும்.

பிறகு சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லம் கலந்த கலவையும் அகத்திக்கீரையும் கொடுக்க வேண்டும்.

மகாலட்சுமி, கிரகலட்சுமிக்குரிய துதிகளைக்கூறி தூபதீப நிவேதனங்களைச் செய்து மூன்று முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.

எங்கள் தாயே கோமாதா ஏற்றம் தந்து காப்பவனே

திங்கள் தோறும் கும்பிட்டால் தேனாய் நலமே தந்திடுவாய்

தொழுவந் தன்னில உலவிடுளாய் தோற்றம் எளிய பாவையே

விழுப்பொருளாய் வந்த தாயே வினையும் களைந்து நலம் சேர்க்க!

Tags:    

Similar News