ஆன்மிக களஞ்சியம்

கல்லீரலை வலுவாக்கும் துளசி

Published On 2024-05-27 12:06 GMT   |   Update On 2024-05-27 12:06 GMT
  • இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.
  • இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாம் உட்கொள்ளும் விஷத்தன்மை கொண்ட உணவுப்பழக்க வழக்கத்தால் தற்போது கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது.

கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை அடிப்படையாக கொண்டு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.

ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித் தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து சலித்து எடுக்கவும்.

ஒரு கிலோ பனை வெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும்.

இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை 6, மதி யம் 12, மாலை 6 மணிக்கு) நெல்லிக்காய் அளவு எடுத்துச் சுவைத்து சாப்பிடவும், இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல் லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனியும், துளசி இலைகளும் தான்.

அவற்றைக் கொஞ்சம் எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகி வர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

துளசி கசாயம், துளசி சிரப், ஆஸ்த்துமா, இளைப்பு நோய், மூளைக்காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச் சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல் லீரல் மெல்ல, மெல்ல சிதை வடையும்.

முற்றிய நிலையில் ரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கு எலுமிச்சம்பழமும் தேனும், தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை, மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர்கேடுகள் மறைந்து, உடம்பு தெம்பாக இருக்கும்.

இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.

இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.

ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும்,

Tags:    

Similar News