ஆன்மிக களஞ்சியம்

கல்கி அவதாரம்

Published On 2024-02-16 11:42 GMT   |   Update On 2024-02-16 11:42 GMT
  • கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.
  • கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி, விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும்.

கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.

கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதற்கு ஒரு முடிவு இல்லை.

கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது.

ஆயுதங்களும் வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News