ஆன்மிக களஞ்சியம்
null

அன்னையை வழிபட்ட தாயுமானவர்

Published On 2024-04-08 10:28 GMT   |   Update On 2024-04-08 10:37 GMT
தாயுமானவர் இத்தலத்தில் அன்னையை போற்றி வழிபட்டார்.

அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்,

"அட்டசித்தி நல் அன்பருக்கு அருள

விருது கட்டிய பொன் அன்னமே!

அண்டகோடி புகழ்காவை வாழும்

அகிலாண்டநாயகி என் அம்மையே"

என்று அன்னையின் அருள் நிலையைப் போற்றுகின்றார்.

அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்

"அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை

அணிஉருப் பாதியில் வைத்தான்

தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்

சடைமுடி வைத்தனன் அதனால்

பிளவியல்மதியம் சூடிய பெருமான்

பித்தன் என்றொருபெயர் பெற்றான்

களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்

கா அகிலாண்ட நாயகியே"

என்று பாடிப் போற்றுகின்றான்.

Tags:    

Similar News