ஆன்மிக களஞ்சியம்

கைலாச நந்தி

Published On 2023-05-27 10:27 GMT   |   Update On 2023-05-27 10:27 GMT
  • கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர்.
  • சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

இவர் கரங்களில் பொற் பிரம்பினையும், வீர வாளினையும் கொண்டுள்ளார். இவர் எப்பொழுதும் தன்னுடைய மூச்சுக்காற்றினால் இறைவனாகிய சிவபெருமானை குளிர்வித்துக் கொண்டே இருப்பவர் என்கிறன சிவ ஆகமங்கள். சிவ ஆலயத்தினுள் அமைக்கப்பெரும் ஒரே நந்தி இவர் என்பதால் ப்ரதிஷ்டை செய்யப்படுகிறார்.

Tags:    

Similar News