ஆன்மிக களஞ்சியம்

ஆனைமுகன் பற்றிய ஆச்சரிய செய்திகள்

Published On 2024-01-29 10:44 GMT   |   Update On 2024-01-29 10:44 GMT
  • இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.
  • சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

சொல்கேட்டான் பிள்ளையார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் அருளும் விநாயகருக்கு சொல்கேட்டான் பிள்ளையார் என்று பெயர்.

இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றிவிட்டனர்.

விசித்திரமாய் விநாயகர்கள்

குடந்தை நாகேஸ்வரன் கோவிலில் ஜூரஹ விநாயகர் கையில் குடையுடன் துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் கையில் கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர்.

தேவக்கோட்டை கோவிலில் காலில் சிலம்பை அணிந்துள்ளார்.

சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

ஸ்ரீசைலத்தின் கிருஷ்ணர் வைத்திருக்க வேண்டிய புல்லாங்குழலை விநாயகர் வைத்திருக்கிறார்.

பவானி சிவன்கோவிலில் விநாயகர் கையில் விணையை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News