search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விநாயகர் அவதாரம்!
    X

    விநாயகர் அவதாரம்!

    • பார்வதிதேவி, தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து விநாயகரை தோற்றுவித்தார்.
    • அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    பார்வதிதேவி தான் நீராட செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.

    அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன்.

    அதை கண்ட தேவி வெகுண்டாள்.

    நிலையை உணர்ந்த சிவன் யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.

    நீயே யாவருக்கும் தலைவன் என்றார்.

    ஸர்வ விக்னஹரம் தேவம்

    ஸர்வ விக்ன விவர்ஜிதம்

    ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்

    வந்தே அஹம் கணநாயகம்.

    என்று போற்றுகிறது.

    அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    Next Story
    ×