search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வடைமாலை வழிபாடு
    X

    வடைமாலை வழிபாடு

    • உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
    • ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்ற ஐதீகம் உள்ளது.

    உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.

    ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.

    ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனாதேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள்.

    ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம்.

    களைப்பில்லாமல் இருக்கலாம்.

    ஆகவேதான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது.

    அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.

    ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார்.

    ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது.

    Next Story
    ×