search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தொழுநோய் நீங்கித் தொழுதனர்
    X

    தொழுநோய் நீங்கித் தொழுதனர்

    • இங்கனம் தங்களது தொழுநோயும் நீங்கி, வரம் பெற்றனர்.
    • நவநாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இங்கனம் தங்களது தொழுநோயும் நீங்கி, வரம் பெற்றனர்.

    நவநாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    அந்த நேரத்தில் காலவமுனிவர் அங்கே வந்து நவநாயகர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கி, "அடியேனுக்கு வரம் கொடுத்துவிட்டுத், தாங்கள் தொழுநோயால் வருந்தினீர்கள்.

    தங்களைத் துன்பத்துக்கு ஆளாக்கிய அடியேனை மன்னிக்கவேண்டும்" என்று சொல்லிக்கதறிக் கதறி அழுதார்.

    நவநாயகர்கள் காலமுனிவரைத் தேற்றிச் சமாதானப் படுத்தினார்.

    பிறகு " நீர் இங்கே எவ்வாறு வந்தீர்?" என்று வினவினர்.

    அது கேட்ட காலவ முனிவர், "நவநாயகர்களே! நீங்கள் விந்தியமலைக்கு வந்து அடியேனுக்கு வரம் தந்து மறைந்த பின்பு நான் மீண்டும் இமயமலைச்சாரலுக்குச் சென்று தங்கினேன்.

    அங்கே வந்த அகத்திய முனிவர், தங்களை அர்க்க வனத்தில் கண்டதையும், நீங்கள் தொழுநோயால் வருந்துவதையும் எடுத்தரைத்தார்.

    அதைக் கேட்டு மனம்பதைந்து தங்களைக் காண இங்கே வந்தேன்" என்றார்.

    Next Story
    ×