search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்பொன்னூஞ்சல்
    X

    திருப்பொன்னூஞ்சல்

    திருச்சிற்றம்பலம்

    சீரார் பவளங்கால் முத்தம் கயிறுஆக

    ஏர்ஆரும் பொற்பலகை ஏறி இனிதுஅமர்ந்து

    நாராயணன் அறியா நாண்மலர்த்தான் நாய்அடியேற்கு

    ஊர்ஆகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

    ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்

    போரார் வேற்கண்மடவீர் பொன்ஊசல் ஆடாமோ.

    மூன்றங்கு இலங்கு நயனத்தன் மூவாத

    வான்தங்கு தேவர்களும் காணா மலர்அடிகள்

    தேன்தங்கித் தித்தித்து அமுதுஊறித் தான் தெளிந்துஅங்கு

    ஊன்தங்கி நின்றுஊருக்கும் உத்தர கோசமங்கைக்

    கோன்தங்கு இடைமருதுபாடிக் குலமஞ்ஞை

    போன்றுஅங்கு அனநடையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்

    பல்நூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்

    தன்நீறு எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்து

    மன்ஊற மன்னும்மணி உத்தர கோசமங்கை

    மின்ஏறும் மாட வியன்மாளிகைபாடிப்

    பொன்ஏறு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    நஞ்சுஅமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்

    மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை

    அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

    நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து

    துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ்பாடிப்

    புஞ்சம்ஆர் வெள்வளையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    ஆ« ணா அலியோ அரிவையோ என்றுஇருவர்

    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

    நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை

    ஊண்ஆக உண்டருளும் உத்தர கோசமங்கைக்

    கோண்ஆர் பிறைச்சென்னிக் கூத்ஙதன் குணம்பரைவிப்

    பூண்ஆர் வனமுலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    மாதுஆடுபாகத்தன் உத்தர கோசமங்கைத்

    தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

    கோதாட்டி நாயேனைஆட்கொண்டு என் தொல்பிறவித்

    தீதுஓடா வண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான்

    காதாடு குண்டலங்கள்பாடிக் கசிந்துஅன்பால்

    போதாடு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    உன்னதற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

    பன்னிப் பணிந்துஇறைஞ்சப்பாவங்கள் பற்றுஅறுப்பான்

    அன்னத்தின் மேல்ஏறி ஆடும் அணிமயில்போல்

    என்¢அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்

    பொன்ஒத்த பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்

    சால அமுதுஉண்டு தாழ்கடலின் மீது எழுந்து

    ஞாலம் மிகப்பரிமேற் கொண்டு நமைஆண்டான்

    சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கை

    மாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்

    பூலித்து அகம்குழைந்து பொன்ஊசல் ஆடாமோ.

    தெங்குஉலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

    தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்தருளி

    எங்கள் பிறப்புஅறுத்திட்டு எம்தரமும் ஆட்கொள்வான்

    பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட

    கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

    பொங்குஉலவு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    Next Story
    ×