search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராகு கேது தலம்
    X

    ராகு கேது தலம்

    • ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார்
    • தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    ராகு கேது திருத்தலமான தம்பிக்கலை ஐயன் கோவில் ஈரோடு சத்தி மார்க்கத்தில் காஞ்சி கோவில் அருகில் உள்ளது.

    அக்காலத்தில் காஞ்சி கோவில் அருகே வனாந்தரமாக இருந்ததாம்.

    ஒரு முறை தம்பிக்கலை ஐயனின் தம்பி நல்லண்ணன் பசுக்களை அருகில் உள்ள வனத்தில் மேய்த்து வருகையில்

    ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார், தம்பிக்கலை ஐயன்.

    இக்காட்சியைக் கண்டபோதே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

    தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    அந்த இடத்தில் மண் செம்பில் தீர்த்தம் எடுத்து வந்து அவ்விடத்தில் மந்திரித்துக் குடித்தால் தோல் வியாதிகளும் மனநோய்களும் குணமாகும்.

    Next Story
    ×