search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மங்களேசுவரியிடம் அருள்பெற்ற விவேகானந்தர்
    X

    மங்களேசுவரியிடம் அருள்பெற்ற விவேகானந்தர்

    • விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.
    • கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.

    18ம் நூற்றாண்டில் விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.

    விவேகானந்தர் இந்திய மன்னர்கள் பலரை சந்தித்து பேசி உதவி கேட்டார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.

    கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.

    சிகாகோவில் சொற்பொழிவு ஆற்ற செல்வதற்கு வேண்டி உதவி கேட்டார்.

    அவர் உதவியும் செய்தார். சேதுபதி சிவபக்தர். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.

    பாஸ்கர சேதுபதி, உத்திரகோச மங்கை திருத்தலத்தில் தனது குலதெய்வமான ஈசன் ஈஸ்வரியிடம் அருள் பெற்று சிகாகோவுக்கு செல்லும்படி விவேகானந்தரிடம் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி விவேகானந்தர் உத்திரகோசமங்கை சென்று பூஜைகள் செய்து பெற்றார்.

    பிறகு பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தரை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சீனா வழியாக சிகாக்கோவிற்கு சுவாமியை அனுப்பி வைத்தார்.

    விவேகானந்தர் சிகாகோ மேடையில் சகோதர, சகோதரிகளே என்று ஆரம்பித்து சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

    சுவாமியை பற்றி உலகம் முழுவதும் தெரியவந்தது.

    உலக நாடுகள் முழுவதும் சுவாமிக்கு வரவேற்பு கொடுத்து வெற்றி விழா கொண்டாட அழைத்தார்கள். ஆனால் சுவாமி எந்த நாட்டுக்கும் செல்லவில்லை.

    உலகப்புகழ் பெறும் வகையில் தனக்கு காரணமாக இருந்த உத்திரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள ஈசன், ஈஸ்வரி மற்றும்பாஸ்கர சேதுபதியைபார்க்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கடித வரைவு ஒன்றை மன்னர் சேதுபதிக்கு எழுதினார்.

    இதன்மூலம் விவேகானந்தரின் பேரும் புகழும் உலகம் முழுவதும் பெருகக் காரணமாக இருந்தது உத்திரகோச மங்கை ஈசன் ஈஸ்வரி தான் என்பது தெளிவாகிறது.

    Next Story
    ×