என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருந்துளசி மகிமை
    X

    கருந்துளசி மகிமை

    • கருந்துளசி விசேஷ குணமுடையது.
    • நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    கருந்துளசி விசேஷ குணமுடையது.

    இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல்

    முதலானவை நீங்கும்.

    நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    தீராத தொண்டைக்கட்டு, வலி நீங்க...

    தினமும் துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி,

    தொண்டைக்கட்டு நீங்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீங்கும்.

    10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி

    கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்தி விட்டு நல்ல கம்பளி கொண்டு உடல்

    முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

    Next Story
    ×