என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அரச வாழ்வு தரும் நரசிம்மர் விரதம்
- வேண்டுவோருக்கு, வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி.
- இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும்.
வேண்டுவோருக்கு, வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி.
இவரை விரதமிருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்.
அரச வாழ்வு வந்து சேரும்.நரசிம்மர் என்பதற்கு 'ஒளிப்பிழம்பு' என்று பொருள்.
திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இது.
நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி.
இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்.
அரச வாழ்வு வந்து சேரும்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார்.
இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.
நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.






