search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அன்னையின் உக்ரத்தை தணிக்க காதணி அணிவித்த ஆதிசங்கரர்
    X

    அன்னையின் உக்ரத்தை தணிக்க காதணி அணிவித்த ஆதிசங்கரர்

    • அன்னையின் உக்ரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
    • அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

    திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்.

    அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாகப் பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகப் பளிச்சென்று தெரியும்.

    இந்தக் காதணிகளைத் தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

    அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததார்கள்.

    இதனால் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றனர்.

    இதை அறிந்த இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

    அன்னையின் உக்ரத்தைத் தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

    உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போலப் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு

    மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்லச் சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச்

    செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

    Next Story
    ×