என் மலர்
செய்திகள்

எதிர்பார்த்தது போல் ரபாடாவிற்கு 2 போட்டியில் விளையாட தடை
ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் துணைக் கேப்டனுடன் மோதிக் கொண்ட ரபாடாவிற்கு 2 போட்டியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. நான்காவது நாளான இன்றுடன் முடிவடைந்த இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு ரபாடா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா, 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மித் வெளியேறிய போது, மகிழ்ச்சியில் ரபாடா ஸ்மித் மீது தோள்பட்டையை வைத்து இடித்தார். இதனால் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2-வது இன்னிங்சில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். வார்னர் அவுட்டானதும் அவரது முகம் அருகில் சென்று கொக்கரித்தார். இதனாலும் குற்றம்சாட்டப்பட்டது.

ஸ்மித்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக மூன்று டிமெரிட் புள்ளிகளும், வார்னருக்கு எதிராக குற்றாச்சாட்டில் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றிருந்ததால் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் விவகாரத்தில் போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS
முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மித் வெளியேறிய போது, மகிழ்ச்சியில் ரபாடா ஸ்மித் மீது தோள்பட்டையை வைத்து இடித்தார். இதனால் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2-வது இன்னிங்சில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். வார்னர் அவுட்டானதும் அவரது முகம் அருகில் சென்று கொக்கரித்தார். இதனாலும் குற்றம்சாட்டப்பட்டது.

ஸ்மித்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக மூன்று டிமெரிட் புள்ளிகளும், வார்னருக்கு எதிராக குற்றாச்சாட்டில் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றிருந்ததால் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் விவகாரத்தில் போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvAUS
Next Story






