search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"

    • கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
    • வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    தற்போது கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, 100 அடி சாலை, புதுச்சேரி-கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு, ராஜீவ்காந்தி மற்றும் இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆங்காங்கே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையே மரப் பாலம் சந்திப்பில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வம் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தார். அதன்பின் அப்பகுதியில் முதலியார்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசாரின் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

    சென்னை-திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் ரெயிவே கேட் உள்ளது. இதன் வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் சைடிங் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில்வேகேட் மூடப்படுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் கடந்த 2010-11ம் ஆண்டில் 4 வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.பின்னர் சென்னை-திருச்சி 6 வழி நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்து. திட்ட மதிப்பீடும் ரூ.52.11 கோடியாக உயர்த்தப்பட்டது. 6 வழிச்சாலை மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதப்பட்டன. பின்னர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள.

    மேலும் மேம்பாலப்பணி காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, அம்பத்தூர், ஆவடியில் இருந்து திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் சுமார் 7 கி.மீட்டர் சுற்றி சென்று வருகின்றன.

    இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர் ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 10 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் விரயம் ஆவதோடு பயண நேரமும் அதிகரிக்கிறது.

    மேலும் சர்வீஸ் ரோட்டை நம்பி செல்லும் கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற தனியார் வாகனங்கள், ரெயில்வே கேட் மூடப்படும் போது, 10 நிமிடம் முதல் 15 நிமிடம் தாமதமாக செல்கின்றன.

    மேலும் சர்வீஸ் சாலையில் திருமண மண்டபங்கள் ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொள்கின்றன.

    மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் முடிவடையாமல் உள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்து உள்ள நிலையில் ரெயில்வே பகுதியில் மட்டும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலபணி நடக்க வேண்டியுள்ளது. அந்த பணியும் முடிந்தால் மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே தற்போது சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் மேம்பாலத்தின் இருபுறமும் ஏற்ற, இறக்க பகுதி, சரிவு பாதையில் மண்கொட்டப்படுகிறது. எனவே இந்த மாத இறுதிக்குள் மேம்பாலத்தில் ஒருவழிப்பாதையை முழுமையாக முடிக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே இடத்தில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உளளனர்.

    • நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
    • கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.

    மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.

    வாகனங்கள் அதிக சூடாகி ரேடியேட்டர் பழுதானாலும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தக்கூட இடமில்லாத நிலையும், ஒரே சீராக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியாத அளவில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது. ஆனால் கோடை சீசன் முடியும் காலம் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு சீசன் காலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தவறும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை எதிர்வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை.
    • ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகள்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தி.நகர் நெரிசல் மிகுந்த பகுதி. இந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உஸ்மான் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் கூடுதலாக மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு சிக்கல்களால் இடியாப்ப சிக்கலில் சிக்கிய நிலையில் தி.நகர் வாசிகள் திணறுகிறார்கள்.

    முறையற்ற இந்த மாற்று திட்டங்களால் பல தெருக்களில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.

    முக்கியமாக ரங்கன் தெரு, ராமசாமி தெரு, மகாலெட்சுமி தெரு, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, வெங்கடேசன் தெரு, பிஞ்சலா சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ராமநாதன் தெரு, நடேசன் தெரு, தண்டபாணி தெரு ஆகிய தெருக்களில் வசிப்பவர்கள் இதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    அவசரத்துக்கு எந்த வாகனங்களும் இந்த தெருக்களுக்குள் சென்று விட முடியாது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை என்பது பெரும் குறை.

    தி.நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கண்ணன் கூறும்போது, குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம். போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்துவற்கு முன்பு பொதுமக்களை கலந்து கருத்து கேட்டு இருக்கலாம். இந்த சிக்கலுக்கு ஓரளவு நிவாரணம் பெற ஐகோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகளை ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போலீசார் புதிய போக்குவரத்து மாற்றங்கள் செய்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் வீடுகளை காலி செய்து விட்டு நெருக்கடி இல்லாத இடத்துக்கு சென்று விட யோசிக்கிறார்கள்.

    மோதிலால் தெருவை சேர்ந்தவர்கள் கூறும்போது, `உள்ளூர் மக்களுக்கு நடமாடவே கஷ்டமாக உள்ளது. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. அதற்காக உள்ளூர் வாசிகள் என்ன விலை கொடுக்க வேண்டும்?

    உள்ளூர் வாசிகள் சந்திக்கும் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. டிசம்பருக்குள் மேம்பால பணியை முடிப்போம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை என்றனர்.

    ரங்கன் தெருவில் இரு பக்கமும் போலீசார் தடுப்பு அமைத்து இருப்பதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவதே சிரமமானதாக இருப்பதாக கூறும் இந்த தெருவாசிகளை பக்கத்தில் உள்ள ராமேஸ்வரம் பாதை வழியாக செல்லலாம் என்றால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமநாதன் தெருவும், ரங்கன் தெருவும் கனரக வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்வதால் உள்ளூர் வாசிகள் ஆட்டோக்களில் கூட செல்ல முடியவில்லை என்கிறார்கள்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் உஸ்மான் ரோடு பாலம் வழியாக செல்ல முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    • வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
    • புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.

    அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

    புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.

    அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

    புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

    தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    • தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    விவசாயிகளின் 4-வது நாள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    டெல்லியின் காஜிபூர் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள 2 பெரிய எல்லைகளான திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மூடப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி போலீசார் பல அடுக்கு முள்கம்பிகள், கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.



    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
    • இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    பிரமாண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி எல்லைப் பகுதிக்கு படையெடுத்தனர்.

    நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் எல்லைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வரிசைகட்டி செல்கின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது இன்று போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி சென்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தால் இன்று டெல்லியில் உள்ள சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

    ×