search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam"

    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் . சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்.

    அதைத்தொடர்ந்து ப்ரித்விராஜ் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கம் செய்யும் இப்படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். கதையை தீப்பு பிரதீப் எழுதியுள்ளார்.

    விபின் தாஸ் இதற்கு முன் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குஞ்சிராமாயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவராவார்.

    இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரித்விராஜ் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதினால் மக்கலிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார் மமூட்டி
    • வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

    அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார் இதற்கு முன் பிரபல மலையாள திரைப்படமான அஞ்சாம் பதிரா மற்றும் ஆப்ரஹம் ஓஸ்லர் படங்களுக்கு கதையை எழுதியது குறிப்பிடத்தக்கது. சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பீஷ்ம பர்வம் படத்திற்கு பிறகு மமூட்டி ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இருக்கிறார். கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி வில்லனாக இப்படத்தில் நடித்துள்ளார்.

    டிரைலரின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
    • மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

    அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

    மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக முன்னர் படக்குழுவினர் அறிக்கைவிட்டனர்.

    ஆனால் தற்பொழுது படம் வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர். வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் டர்போ மோட் ஆக்டிவேடட் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
    • இப்படம் 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குனர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்தது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.




    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்தார். கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி,  மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

    இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.




    இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து வருகின்றனர். மேலும் இப்படம் தற்போது 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
    • லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்

    ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

    ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.

    ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

     

    லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

     

    அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.

     

    அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

    இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

    • 1983 ஆம் ஆண்டு வெளியான ’விசா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இந்நிலையில் அடுத்ததாக ’டர்போ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் அப்படத்தை இவரே தயாரிக்கவும் செய்கிறார்.

    இந்நிலையில் அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

    மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. நேற்று படம் வெளியாகும் தேதி அறிவிப்புடன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்
    • தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ’லவ் ஆக்‌ஷன் டிராமா’.

    2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்குகிறார்கள்.

     

    பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க போகிறார் என்பதை படக்குழுவினர் ஒரு வீடியோவின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதில் பேப்பரில் இங்க் ஊற்றி நயந்தாராவின் புகைப்படம் தெரிகிறது. இந்த வீடியோவை நிவின் பாலி அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.

    இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்
    • இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

    'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகும் 'சீயான் 62' படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 62' எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார்.
    • சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

    கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    சமூக வலைத்தளங்களில் 'கண்மணி அன்போடு காதலன்' பாட்டு மிகவும் வைரலாகியது.

    படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.

    தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது  நடித்து வருகிறார். 

    சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
    • படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் " நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றியதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர்.

    இப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கினார். கடந்த பிப்ரவரி 22-ந் தேதி இப்படம் வெளியானது. அனைத்து மாநில தியேட்டர்களிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ.200 கோடி வசூலை குவித்து உள்ளது.மேலும் இப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.




    தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படக்குழுவினர், 'குணா' படத்தின் கதாநாயகன் கமலை சந்தித்து சமீபத்தில் வாழ்த்துகள் பெற்றனர்.

    இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

    இது குறித்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழு தங்களது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ''சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
    • .மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்துது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார். படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

     இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.

    இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×