search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's World"

    • இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி.
    • அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    இந்த சோதனை பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய மருத்துவர்களால் செய்யப்படும் மருத்துவ முறையாகும். இது இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகையாகும். இதில் கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் யோனி பகுதிகளில் பரிசோதனை செய்ய இந்த கருவி பயன்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனையானது உங்கள் உள் உறுப்புகளின் படங்களை உருவாக்க உயர்ந்த அதிர்வெண் அலைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    அடிவயிறு அல்லது இடுப்பு அல்ட்ராசவுண்ட் டிரான்ஸ்யூசர் பயன்படுத்தப்படும். இப்பரிசோதனையில் மருத்துவர் அல்லது பரிசோதனை செய்யும் நிபுணர் யோனி பகுதி வழியாக 2 அல்லது 3 அங்குல அல்ட்ராசவுண்ட் ஆய்வை செருகுவார். இது கர்ப்பத்தை கண்காணிக்கவும், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடவும் உதவிபுரியும்.

    கர்ப்ப காலத்தில் கருவின் இதயத்துடிப்பை கண்காணிக்கவும், கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் காரணங்கள் உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கான அறிகுறி உணரும் போது கருப்பை வாயை பார்க்க இவை பரிந்துரைக்கப்படுகிறது.

    நஞ்சுக்கொடி அசாதாரணங்களை பரிந்துரைக்கவும். அசாதாரண ரத்தபோக்குக்கான மூலத்தை கண்டறியவும், சாத்தியமான கருச்சிதைவை கண்டறியவும், ஆரம்ப கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் யோனியின் உட்புறம் செருகுவதால் இது அசெளகரியத்தை கொடுக்கலாம். இந்த கருவியானது யோனியின் வடிவத்தை வளைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்முறை முடிந்தவரை வலியற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை டாக்டரிடம் சொல்ல தயங்குகிறார்கள்.
    • இது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை மருத்துவர்களிடம் கூட நேரடியாக சொல்ல தயங்குகிறார்கள்.

    இது வெட்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல் குறித்த பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகளை மருத்துவரிம் மறைக்க கூடாது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு நீங்கள் விரும்பினால் இந்த பிரச்சனைகளை நீங்கள் மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    அடிவயிற்று வலி

    மாதவிடாயின் போது பிடிப்புகள், மார்பக வலி மற்றும் தலைவலி உண்டாகலாம். சில பெண்களுக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இந்த வலி இருக்கும் சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு இருக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு மாதமும் வேதனையாக மோசமானதாக இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    உடலுறவின் போது வலி

    தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது உடலுறவில் தீவிரமாக வலி இருந்தால் இது இயல்புதான் என்று நினைக்காமல் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். ஏனெனில் பிறப்பு உறுப்பில் வறட்சி தன்மை இருந்தால் உடலுறவின் போது அசெளகரியம் உண்டாக்குவதோடு வலியையும் ஏற்படுத்தும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

    பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பு வறட்சியாகவே இருந்தால் அல்லது உறவுக்கு பின்பு பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

    வெள்ளைப்படுதல்

    பெண்களின் பிறப்புறுப்பில் கசியும் வெள்ளைப்படுதல் பெண் உறுப்பை பாதுகாக்கவே. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்பு அல்லது பின்பு இந்த வெள்ளைப்படுதல் இருக்கும். இது எல்லாருக்குமே பொதுவானது. ஆனால் சிலருக்கு வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு அவை நிறத்திலும் மஞ்சள் பச்சை என்று இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டியதே. உடனடி சிகிச்சை தேவையாக இருக்கலாம்.

    பெண் உறுப்பு பகுதியில் கட்டி

    பெண்களின் பிறப்புறுப்பு பகுதியின் உட்பகுதி வல்வா என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் வரும் புடைப்புகள் மற்றும் வளர்ச்சியை கண்டறிந்தால் நீங்கள் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இது ஹெர்பேஸ் அல்லது மருக்கள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்க்களின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்கள் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாக இருப்பது அவசியம். 

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பி.சி.ஓ.எஸ். பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
    • மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டும்.

    பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    முகப்பரு

    அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி)

    கூந்தல் உதிர்வு

    தோல் நிறம் மாறுதல்

    உடல் எடை அதிகரிப்பு

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

    பி.சி.ஒ.எஸ் (PCOS or PCOD) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும்.
    • உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சில காரணங்களால், பெண்கள் மாதவிடாயை முன்னரே சந்திக்க நினைப்பர். இந்த நேரங்களில் மருந்து, மாத்திரைகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் இயற்கையான முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனை சந்திக்க முடியும். இதில், மாதவிடாய் காலம் சீக்கிரம் வர பெண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    இஞ்சி டீ

    மாதவிடாய் காலத்தை நெருங்குவதற்கு இஞ்சி டீ ஒரு அற்புதமான தேர்வு ஆகும். ஏனென்றால் இஞ்சி டீ கருப்பையை சுற்றி அதிக வெப்பத்தை உண்டுபண்ணுகிறது. இதனால் மாதவிடாய் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    எள்

    உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எள்ளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மாதவிடாய் விரைவில் வருவதற்கு ஏதுவாக அமைகிறது.

    வைட்டமின் சி பழங்கள்

    வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களான பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்கள் அடங்கும். பப்பாளி பழமானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடிய கரோட்டின் பழமாகும். இந்த பழங்களை உட்கொள்வதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும்.

    கொத்தமல்லி விதை

    கொத்தமல்லி டீ அருந்துவதன் மூலமும் மாதவிடாய் காலத்தை முன்னதாகவே அடைய முடியும். தேவையான அளவு கொத்தமல்லி விதைகளை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து நன்கு ஆறிய பிறகு அருந்த வேண்டும்.

    பீட்ருட்

    பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மாதவிடாயைத் தூண்டக்கூடிய வகையில், பீட்ரூட் பழம் அமைகிறது.

    மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், மாதவிடாக் காலத்திற்கு முன்னதாகவே அதனை நெருங்க முடியும்.

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் கொஞ்சம் 'ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

    இதுபோன்ற பணி சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். பயணங்களில் கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள். இது மனரீதியாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.


    காதலியுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.

    • கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்து உணவுகள்.
    • ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு உடலுக்கு சமநிலையை வழங்குகிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தாதுக்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளாக உள்ளன.

    கர்ப்ப காலத்தில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த முடியும். இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவற்கு உதவும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவற்கும் உதவுகிறது.

    பேரீச்சை

    பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருட்கள் உள்ளது.

    கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். பேரீச்சம்பழங்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கர்ப்ப காலத்திற்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த உணவாகும்.

    மாதுளை

    மாதுளையில் வைட்டமின் சி மற்றும் கே, அத்துடன் பல ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை பெண் கருவுறுதலை அதிகரிக்கச் செய்வதாகவும், கருப்பை சுவரை தடிமனாக்க உதவுவதாகவும், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மக்கா வேர்

    மக்கா ரூட் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். இது சத்தானது மற்றும் வைட்டமின்கள் பி, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இந்த வேர் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

    இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் அரை டீஸ்பூன் மக்கா ரூட் தூள் சேர்க்கவும். நீங்கள் பல மாதங்களுக்கு மக்கா ரூட் தூள் எடுக்கலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதை தவிர்க்கவும்.

    வைட்டமின் டி

    உடலில் வைட்டமின் டி இல்லாதது கருவுறாமைக்கு வழிவகுக்கும் மற்றும் முந்தைய கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.

    எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதலில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் காட்டுகின்றன.

    லவங்கப்பட்டை

    இந்த அற்புதமான மருந்து பெண்களின் கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலட்டுத்தன்மையை தடுக்கிறது. பெண் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த தேநீரை பல மாதங்களுக்கு குடிக்கலாம்.

    ஆலமரத்தின் வேர்கள்

    ஆலமரத்தின் வேர் கருத்தரிப்பிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேரின் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல மாதங்கள் கூட இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூண்டு

    கர்ப்பம் தரிக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வு உண்டு என்றால் அது பூண்டு சாப்பிடுவது. பூண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பூண்டு விந்தணு மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. 1 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடலாம்.

    பூண்டை மென்று சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்கவும். அல்லது பாலில் பூண்டு பற்களை வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம். கருவுறுதலை மேம்படுத்த குளிர்காலங்களில் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும்.

    • பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம்.
    • எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்.

    சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம். எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் உங்களுக்காக....

    சமைக்கும் போது பால் பாத்திரம், டீ போடும் பாத்திரம் மற்றும் குழம்பு வகைகள் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டால், இனி அதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம். இப்படி செய்து பாருங்கள்.

    பாத்திரத்தில் அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்யூடை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும்.

    இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடலாம்.

    அதன்பிறகு பாத்திரத்தை ஒரு துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் ஸ்க்ரப் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தால் போதும் அந்த கறைகள் நீங்கி விடும். இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென்று இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். உதவியாக இருக்கும்.

    • பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக உள்ளது.
    • கருமுட்டை குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    கரு முட்டைகளை உறையவைப்பது என்றால் என்ன?

    கரு உறைய வைத்தல் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். இதில் 2 முறைகள் பராமரிக்கப்படுகிறது. ஒன்று பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் முறை.

    மற்றொன்று கருமுட்டைகளை விந்தணுவுடன் சேர்த்து கருவாக உறுமாறி 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு எம்ரியோ ஃப்ரீசிங் அதாவது கரு உறைய வைத்தல் முறை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

    இந்த முறையில் கருமுட்டைகளை மட்டுமே எடுத்து சேமித்து வைக்கும் போது அது தரமான முட்டைகள் தானா என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது. சில நேரங்களில் கருக்கலைந்துபோக வாய்ப்புகள் அதிகம். எனவே தான் இந்த கருமுட்டைகளை எம்ரியோவாக மாற்றி தான் சேமித்து வைப்பது தான் நல்லது.

    அப்படி உருமாற்றி உள்ள கருவை திரவ நைட்ரஜை பயன்படுத்தி குடுவைக்குள் செலுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தேவைப்படும் போது எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

    பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான 'ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்' என்பது இதன் பெயர். இதனை கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை என்று குறிப்பிடப்படுகிறது.

    இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

    ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்கள் அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

    எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     

    கரு முட்டைகளை எப்படி உறையவைப்பது?

    மாதவிடாய் காலத்தின்போது, பொதுவாக ஒரு கரு முட்டை உருவாவதுண்டு. பல கரு முட்டைகள் உருவாவதற்கு பெண்களுக்கு ஊசி வழியாக சுரப்பிநீர் செலுத்தப்படும்.

    கரு முட்டைகளை அகற்ற, அல்ட்ரா சவுண்டு கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    தரம் மிகுந்த கரு முட்டைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, அந்த நடைமுறை பல முறை தொடரலாம். அதன்பிறகு கரு முட்டைகள் பின்னர் உறையவைக்கப்படும்.

    நடைமுறையில் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

    யாரெல்லாம் எக் ஃப்ரீசிங் முறையை பயன்படுத்தலாம்.

     இப்போது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக "எக் ஃப்ரீசிங்" எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.

    உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளம்வயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.

    ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.

    எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.

    தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லை என்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

    மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.

    உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

    அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்த பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    பெண்ணின் கருவணுவகத்தில் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்த கரு முட்டைக்குள் புகுத்தி அதை சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது.

    அந்த கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

    பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

    • வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது.
    • வயதாகும்போது, ​​குறைவான முட்டைகள் கிடைக்கின்றன.

    கருமுட்டை தரம் குறைதல்

    முட்டையின் தரத்தில் வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைவான முட்டைகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறக்கும் போது குறைந்த அளவு முட்டைகள் உள்ளன, மேலும் அவர்கள் வயதாகும்போது, குறைவான முட்டைகள் கிடைக்கின்றன, இது இயற்கையாக கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம்.

    ஹார்மோன் மாற்றம்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகள்

    நார்த்திசுக்கட்டிகள், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிக்க மிகவும் சவாலான சில மருத்துவ பிரச்சனைகளாகும்.

    கர்ப்பத்தில் சிக்கல்

    முன்கூட்டிய பிரசவம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்ப பிரச்சினைகளில் அடங்கும்.

    குரோமோசோம் அசாதாரணங்கள்

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணுக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    கருவுறுதல் சிகிச்சையின் செயல்திறன் குறைந்தது. ஐ.வி.எப் போன்ற கருவுறாமை சிகிச்சைகள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், இது கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    40 வயதிற்கு மேற்பட்ட கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணரிடம் தங்கள் விருப்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சாத்தியமான சிரமங்கள் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

    ×