search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram"

    • ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.

    இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.

    ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.

    பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

    இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.

    அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ெஹ.ச்.டி. படிப்பை முடித்துள்ளார்.

    2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.

    பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

    ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

    • தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
    • இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் பழைய மரக்காணம் என்ற கிராமத்தில் கடந்த 18-ந் தேதி கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஏற்கனவே மக்களவை தேர்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஆகவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பை ஏற்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.5, ரூ.6 வரை குறைந்த பட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

    இதனிடையே சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் ,சாலை விஸ்தரிப்பு பணியும் நடந்து வரும் நிலையில் காத்திருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது .

    இந்தப் பள்ளி கட்டிடம் ஆனது சாலை விரிவாக்க பணியில் இடிபடும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இடித்து அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஊராட்சி கட்டிடம் உள்ளிட்டவைகளில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் பணியை பார்வையிட்டார்.

    • விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • இப்பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பனங்குப்பம் ஊராட்சியில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க–ப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பணி யினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கண்டமங்க–லம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.58 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு நூலகம் மாணவர்களுக்கும்ர பொது–மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவு புத்தகங்கள் வரவழைத்து வைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.14.37 லட்சம் மதிப்பீட்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் விவசாயப்பணிக்கு ஏற்ப பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவர்கள் பணி–யாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டு நன்றாக பராமரிக்க மருத்து––வர்களுக்கு அறிவுறுத்தி–னார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதி கரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அவர் களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருகிற 12.6.2022 அன்று நமத மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்பட வுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்ப–பைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி ஆகும். 12.6.2022 அன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரானா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்ர் மோகன் தெரிவித்துக் கொண்டார்.

    • லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார்.
    • விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவர் வண்டல்மணல் அள்ளுவதற்காக கடந்த 2019 ஜூன் மாதம் செஞ்சி தாசில்தார் ஆதிமூலம் என்பவரை அணுகினார். அப்போது தாசில்தார் ஆதிமூலம், விவசாயி வடிவேலுவிடம் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த விவசாயி வடிவேல் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதனடிப்படையில் தாசில்தார் ஆதிமூலம் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார். இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த அண்ணாதுரை, தாசில்தார் ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்தார்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் சாட்சியாக தற்போது வேளாண்துறை இயக்குனராக இருக்கும் முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
    • ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    விழுப்புரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம் (வயது 46), வேலு (45), ரகோத்தமன். இவர்கள் 3 பேரும் விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் விழுப்புரத்தில் நேற்று ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு சண்முகத்தின் ஆட்டோவில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோவை சண்முகம் ஓட்டினார்.

    விழுப்புரம்-சென்னை புறவழி சாலையில் உள்ள முத்தாம்பாளையம் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையை ஆட்டோவில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக ஆம்னிபஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சண்முகம் ஓட்டிவந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

    ஆட்டோவை ஓட்டிவந்த சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேலுவும், ரகோத்தமனும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வேலு பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ரகோத்தமனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 11 புதிய பஸ்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 82 பஸ்கள் உள்பட 555 புதிய பஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் மண்டலத்திற்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 பஸ்கள் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 11 புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை- சேலம், கள்ளக்குறிச்சி- சென்னை, சேலம்- சென்னை, திருவண்ணாமலை- சென்னை, புதுச்சேரி- சென்னை ஆகிய வழித்தடங்களில் 11 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கலெக்டர் சுப்பிர மணியன், ஏழுமலை எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் கணேசன், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், முருகதாஸ், சுந்தர்ராஜன், கோட்ட மேலாளர் துரைசாமி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பேரவை இணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×