search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • ஜூன் 2-ந்தேதி சரணடைந்து ஜெயிலுக்கு போக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா அடங்கிய பெஞ்ச் "விவாதங்கள் கேட்கப்பட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ந்தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம்.
    • எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது.

    இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.

    நான் மீண்டும் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில் "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம். அதைப்பற்றி நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது. இது நீதிமன்றம் உத்தரவு. நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படுகிறோம்.

    எங்களுடைய முடிவு குறித்த விமர்சனத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் செல்லவில்லை. எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்கியதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

    • நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.
    • நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது, "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம், ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டாமா? என்ற விமர்சனத்தை எழுப்பியது. அமித் ஷாவும் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் பேச்சு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
    • அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெறவேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

    சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.

    குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும்.

    காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.

    நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள் ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஜூலை 10-ந்தேதிக்கு ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன்.
    • ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்தும், அவரது கட்சிக்கு ஆதவாக போதுமான வாக்குகள் விழுந்தால் மீண்டும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்காது எனக் கூறியிருக்கிறாரே? அதைப் பற்றியும் தங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமித் ஷா அளித்த பதில் பின்வருமாறு:-

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன். ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

    சட்டத்தை விளக்குகின்ற உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. இது ஒரு சாதாரண அல்லது வழக்கமான தீர்ப்பு அல்ல என நான் நம்புகிறேன். சிறப்பு கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது என நாட்டின் பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.

    திகார் சிறையில் கேமரா அமைக்கப்பட்டு, அது பிரதமர் மோடி ஆலவலகத்திற்கு காண்பிக்கப்படுகிறது என்ற கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கெஜ்ரிவால் கட்சி 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஒட்டுமொத்த நாட்டின் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 22 இடங்களில் மட்டுமே போட்டியிடும்போது, எப்படி ஆட்சியமைக்க முடியும்.

    உச்சநீதிமன்றத்தில் அவரது கைது முறைகேடு என வழக்கு தொடர்ந்துள்ளார். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் ஜாமின் கேட்டார். நீதிமன்றம் ஜாமினும் வழங்கவில்லை. இரண்டையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அதன்பின் தேர்தல் பிரசாரத்திற்காக அனுமதி கேட்டார். நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜூன் 2-ந்தேதி அவர் மீண்டும் திகார் ஜெயல் செல்ல வேண்டும். இது எப்படி அவருக்கு சாதகமாகும்.

    இவ்வாடி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, பின்னர் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தினார். அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தார். என்றபோதிலும் மத்திய அரசு இவரது தலைமையிலான போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

    இருந்தபோதிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பினார்.

    வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்று (மே 14-ந்தேதி) ஆகும்.

    கடைசி நாளில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யாக்கண்ணு கடந்த 10-ந்தேதி வாரணாசி செல்லும் ரெயில் பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிகிறது.

    இதனால் தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை நீட்டிக்க வலுயுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகிய நீதிபதிகள் "இந்த மனு சுயநலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த மனுவை வாபஸ பெற எங்களால் அனுமதிக்க முடியும். நாங்கள் டிஸ்மிஸ் செய்ய நீங்கள் விரும்பினால், எங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும்" எனத் தெரிவித்தனர்.

    மேலும், அய்யாக்கண்ணு ஏன் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார்? என இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மனு விளம்பரத்தை பெறுவதற்கானது என பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன் அய்யாக்கண்ணு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

    • திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
    • கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது

    திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் மே 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    செந்தில் பாலாஜி 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். வழக்கை காலதாமதப் படுத்துவதற்காகவே அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கால அவகாசம் கோருகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளி வைப்பதாக இருந்தால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

    • பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது.
    • இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

    அதன்படி, இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது.

    தேவைப்படும் பட்சத்தில் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுடன் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடலாம்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது பங்கு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக்கூடாது.

    இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

    • அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
    • மக்களவை தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து யோசிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவிப்பு.

    டெல்லி மாநல மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் மே 5-ந்தேதி (நேற்று) இருதரப்பு தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்து. அதற்கு அவர்களும் கையெழுத்திடமாட்டார் என உறுதியளித்தது.

    அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது. அடுத்த விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10-ந்தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

    ×