என் மலர்
செய்திகள்
- மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
- எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,
"100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.
தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.
தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.
விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.
ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
- வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் மூலம் அதிக அளவிலான பயணிகள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு முடிவு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அதிக அளவிலான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவார்கள்.
இதன் எதிரொலியாக தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,765 நிர்ணயிக் கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையை முன்னிட்டு ரூ.9,046 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோன்று பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,573 இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.8,655 ஆகவும், ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.5,321 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.15,529 ஆகவும்,
மும்பையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.6,119 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.13,306 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சிவகார்த்திகேயனின் 25வது படம்.
- முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி.
சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும்
- காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1270
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ காணலாம். 645 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பின்பு கூடுதலாக, 625 இடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப் 2,2ஏ பதவிகளுக்கான மொத்தம் எண்ணிக்கை என்பது 1270 ஆக உயர்ந்துள்ளது.
- குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக ரயில்வே இருக்கிறது
- கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,
"நடுத்தர, ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் வகையில், ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்வே, மக்கள் நலனின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, லாப நோக்கில் கட்டண உயர்வுகளுக்கான போக்குவரத்தாக மாறக் கூடாது.
ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வரி சுமை ஆகியவற்றால் திணறும் நிலையில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்த ரயில் கட்டண உயர்வு மேலும் சுமையையே ஏற்படுத்தும். மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு–தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
எனவே, ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இந்த மக்கள் விரோத முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
- தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு.
திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்த ப்படாமல் செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகரித்துள்ளது. இது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரம் மூலம் தி.மு.க.வினர் புலி வாலை பிடித்து விட்டனர். ஏற்றுமதி நிறைந்த நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக உள்ளது. திருப்பூர் மாவ ட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பது மக்கள் மீது அவர்கள் எந்த அளவு க்கு அக்கறை வைத்திரு க்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
உரிய முறையில் ஆய்வு செய்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை இணைக்க தமிழக வெற்றி கழகம் முயற்சி செய்யும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் 2 கட்சிகளும் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சி னையை உருவாக்கியது இவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
- தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார்,
வேலூர்:
வேலூர் மின் பகிர்மான வட்டம் வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர்,
பிஷப்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி.ரோடு மற்றும் வல்லாண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய அதிகாரி ஆரோக்கியஅற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
- இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
- பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.
புதுடெல்லி:
'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்' என்பது பழமொழி. அதுபோல, இறைவன் கொடுப்பதாக இருந்தால் எந்தத் தடையையும் மீறி, மிக பிரம்மாண்டமாக, எதிர்பாராத வழிகளில் வந்து கொடுப்பார் என்பதை உணர்த்துவதே இந்தப் பழமொழி.
அதுபோல, பிரபலமான ஒரு இளம்பெண்ணின் பிளாஷ்பேக்தான் இது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது கும்பமேளா. 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா.
அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் வீதி வீதியாக ருத்ராட்ச மாலைகள், பாசிமணி விற்றுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமானார். அவரது வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்.
அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் ஆகியவை பக்தர்கள் மட்டுமின்றி மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களின் அனைத்துப் பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்தது.
'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு ஓ.டி.டி. நிறுவனங்கள் அவரை வெப் தொடரில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதுமட்டுமின்றி, பிரபல கடைகள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.
- நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிக நிதி வசூலிக்கும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த பிறகு தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது.
அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி வரை ரூ.6654 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
பா.ஜ.காவால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.6654 கோடி நன்கொடை பெற்ற இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது. தற்போது அந்த கட்சியின் நன்கொடை 68 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
பா.ஜ.க-வுக்கு கிடைத்த நன்கொடைகளில் ரூ.3744 கோடி தேர்தல் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது. எஞ்சிய தொகை பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கிடைத்து உள்ளது.
தேர்தல் அறக்கட்டளை நன்கொடையில் புரூடென்ட் அறக்கட்டளை ரூ.2180 கோடி அளித்துள்ளது.
தேர்தல் அறக்கட்டளையை தவிர்த்து நன்கொடை அதிகம் அளித்தவர்களில் முதல் 30 இடங்களில் பெருநிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சீரம் தனியார் நிறுவனம் (ரூ.100 கோடி), ரங்டாசன்ஸ் தனியார் நிறுவனம் (ரூ.95 கோடி), வேதாந்தா நிறுவனம் (ரூ.67 கோடி) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பஜாஜ் குழுமத்தின் 3 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து ரூ.66 கோடியை அளித்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் ரூ.35 கோடியும், திலீப் பில்கான் குழுமம் ரூ.29 கோடியும், ஹீரோ குழுமம் ரூ.23.65 கோடியும் பங்களித்துள்ளன.
தனி நபர்கள் அனைவரும் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். நிறுவனங்கள் காசோலை, வரை வோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் வாயிலாக பணத்தை கொடுத்துள்ளன.பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் நன்கொடையை அளித்துள்ளனர்.
நன்கொடைபெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு காணப்பட்டது. அந்த கட்சிக்கு ரூ.522.13 கோடியே கிடைத்தது. கடந்த 2023-24-ம் ஆண்டில் அந்த கட்சிக்கு ரூ.1129 கோடி கிடைத்தது. இது 43 சதவீத சரிவாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.184.08 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்தது. இது பெரும் சரிவாகும். கடந்த ஆண்டு ரூ.618.8 கோடி கிடைத்து இருந்தது. பாரத் ராஷ்டிரீய சமிதி (பி.ஆர்.எஸ்.) நன்கொடை ரூ.580 கோடியில் இருந்து ரூ.15.09 கோடியாக குறைந்தது. இது பெரும் வீழ்ச்சியாகும்.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் நன்கொடை அதிகரித்து உள்ளது. அந்த கட்சி ரூ.39.2 கோடி நன்கொடையாக பெற்றது. கடந்த முறை ரூ.22.1 கோடிதான் கிடைத்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.85.2 கோடியும் (முன்பு ரூ.274 கோடி), பிஜூ ஜனதா தளத்திற்கு ரூ.60 கோடியும் (ரூ.246 கோடி) கிடைத்தன.
காங்கிரஸ் பெற்ற நன்கொடையை விட பா.ஜனதா 12.5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்ல அதன் ஒட்டு மொத்த கூட்டணியிலும் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே மொத்தம் வெறும் ரூ.1343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால் கூட பா.ஜ.க 4½ மடங்கு அதிக நிதியை வசூலித்து இருக்கிறது.
- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது
- அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி,
திண்டுக்கல்:
திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை (23ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி,
அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலைய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
- சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.
படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.






