என் மலர்tooltip icon

    உலகம்

    • மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது.
    • பலியான 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

    மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. மேலும் மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 570-ஆக உயர்ந்து உள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்ரூட்டில் உள்ள ஒரு ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பலியான 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

    லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள பல இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர்.

    • பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

    சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னின் மேற்கே உள்ள கெர்சர்ஸ் நகரில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சில பயணிகள் பஸ்சுக்குள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

    இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது உள்ளன.
    • எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எபிஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.

    அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும், எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த சூழலில் அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் - டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் மாலில் எப்ஸ்டீனும் டிரம்ப்பும் கைகோர்த்து நிற்கும் சிலை நிறுவப்பட்டு பின் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 7 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
    • 8 வீரர்கள் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 7 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஈரானுடனான போரில் 140 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக பென்டகன் கூறும்போது, ஈரானுடனான கடந்த 10 நாட்கள் மோதலில் சுமார் 140 அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    இந்தக் காயங்களில் பெரும்பான்மையானவை லேசானவை ஆகும். 8 வீரர்கள் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்தது.

    • நாங்கள் சொன்னதும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.
    • இந்த குறுகிய கால சலுகை பொருளாதார பலனை வழங்காது.

    அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போரினால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் எல்பிஜி உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியாதே இந்த தட்டுப்பாடுகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த சூழலில் இந்தியாவில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்து வரும் சூழலில் ரஷியா தனது எண்ணெய்யை கூடுதலாக கொடுக்க முன்வந்தது.

    ஆனால் அண்மையில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடம் எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது.

    இதற்கிடையே போர் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தியா 30 நாட்களுக்கு மட்டும் ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்தியாவின் எரிசக்தி முடிவுகளை அமெரிக்கா எடுப்பதாகவும், மோடி அரசு நாட்டின் சுதந்திரத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த சூழலில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    பேட்டியில் அவர் பேசியதாவது, ஏற்கனவே கப்பல்களில் ஏற்றி தயாராக உள்ள ரஷியாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள அமெரிக்கா தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

    ஈரான் உடனான மோதலை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த குறுகிய கால சலுகை மாஸ்கோவுக்கு குறிப்பிடத்தகுந்த பொருளாதார பலனை ஒன்றும் வழங்காது.

    இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் நல்ல நடிகர்கள் என்பதாலும், முன்பு நாங்கள் சொன்னதும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பதாலும் அவர்களுக்கு சலுகை வழங்க அதிபர் டிரம்ப், கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு அணி கூட்டாக இந்த முடிவை எடுத்தனர்" என்று தெரிவித்தார்.

    முன்னாதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட், இந்தியர்கள் எங்கள் சிறந்த கூட்டாளிகள், நல்ல நடிகர்கள், முன்னர் நாங்கள் சொன்னதுபோல் ரஷிய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தினார்கள் என்பதால் இந்த சலுகையை தற்காலிகமாக வழங்க முன்வந்தாக கூறியிருந்தது சரசையான நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையும் அதிகாரபூர்வமான அதை தற்போது கூறியுள்ளது. 

    • ஈரானின் 44 போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
    • மத்திய கட்டளை பிரிவு அறிவித்து உள்ளது. மேலும், கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இன்று 12-வது நாளாக நீடிக்கும் இப்போரில் இருதரப்பும் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.

    இதில், ஈரான் ராணுவ உள்கட்டமைப்புகள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரானின் 44 போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்த நிலையில் கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா ராணுவம் அறிவித்து உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உள்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்து உள்ளதாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு அறிவித்து உள்ளது. மேலும், கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.

    உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தவறினால் முன்பு கண்டிராத அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் 16 கண்ணிவெடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் ஈரான் மீது இஸ்ரேல் இன்று கடுமையான வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதில் தலைநகர் தெக்ரானில் உள்ள ஒரு வங்கி கட்டிடம் மீது குண்டு வீசப்பட்டது. மேலும், ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கினர்.

    அதேபோல் இஸ்பஹான் உள்பட ஈரான் முழுவதும் தாக்குதல்கள் நடந்தன. இஸ்பஹான் நகரில் நடந்த தாக்குதலில் அங்குள்ள ரஷிய துணை தூதரகம் சேதம் அடைந்தது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் தனது பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை ஈரான் வீசியது.

    இந்த பல அடுக்கு தாக்குதல்களில் கோ ரம்ஷஹர் ஏவுகணைகளை பயன்படுத் தியதாகவும், இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கே உள்ள ஹேலா செயற் கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தையும், பீர் யாகூப், மேற்கு ஜெருச லேம் மற்றும் ஹைபாவில் உள்ள ராணுவ தளங்களை யும் 2-வது முறையாக குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்து உள்ளது.

    அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஈரானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணை களை இடைமறித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. சவுதி அரேபியாவில் உள்ள சுல்தான்விமான தளத்தை நோக்கி ஏவப்பட்ட 6 ஏவுகணைகளையும், நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரு ஏவு கணையும் இடைமறிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், சவுதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த 5 டிரோன்கள் அழிக்கப்பட்டன. குவைத்தில் உள்ள கேம்ப் அரிப்ஜான் அமெ ரிக்க தளத்தை குறிவைத்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. பக்ரைனில் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    ஈராக்கின் பாக்தாத் அருகே அமெரிக்க தூதர்கள் தங்கியிருந்த ஒரு தளத்தை ஈரான் டிரோன் தாக்கியது.

    • உலகநாடுகளில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல்-டீசல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

    கொழும்பு:

    வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் உலகநாடுகளில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலையை உலக நாடுகள் கணிசமாக உயர்த்தி வருகின்றன. அதன்படி அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல்-டீசல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

    பெட்ரோல் விலை இலங்கை மதிப்பில் லிட்டருக்கு ரூ.25 உயர்ந்து ரூ.366 ஆக உயர்ந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்ந்து ரூ.353 ஆனது. மண் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆனது. மக்களின் பீதி மற்றும் பதுக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்தது.

    • அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜன்னல்கள் உடைந்தன.
    • பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷியா தெரிவித்தது.

    ஈரானிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள ரஷிய துணைத் தூதரகம் இந்த வார தொடக்கத்தில் ஷெல் தாக்குதலில் சேதமடைந்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார்.

    ராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் மீதான தாக்குதல் சர்வதேச மரபுகளை "அப்பட்டமாக மீறுவதாகும்" என்றும், அனைத்து தரப்பினரும் "இராஜதந்திர தளங்களின் மீறல் தன்மையை" கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    "மார்ச் 8 ஆம் தேதி, ஈரானிய நகரமான இஸ்ஃபஹானில், அருகிலுள்ள அதே பெயரில் உள்ள மாகாணத்தின் ஆளுநரின் நிர்வாகத்தின் மீதான தாக்குதலின் விளைவாக, ரஷிய தூதரகம் சேதமடைந்தது" என்று ஜகரோவா அமைச்சகத்தின் வலைத்தளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    அறிக்கையில், "அலுவலக கட்டிடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜன்னல்கள் உடைந்தன, மேலும் பல ஊழியர்கள் குண்டுவெடிப்பால் தூக்கி எறியப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

    முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் மோதல் குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷியா தெரிவித்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அதிபர் புதின் அனைத்து விரோதங்களையும் நிறுத்த அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

    • ஈரான் மீது 20 மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
    • உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை அழிக்க முடியவில்லை.

    டெஹ்ரான்:

    எண்ணெய் கப்பல்களை தடுத்தால் ஈரான் மீது 20 மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    அதற்கு ஈரான் பதில் அளித்துள்ளது. அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லரிஜானி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தியாக தேசமான ஈரான் உங்களது (டிரம்ப்) வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சாது. உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை அழிக்க முடியவில்லை. நீங்களே அழிந்து போகாத அளவுக்கு உஷாராக இருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டிரம்பை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த காலங்களில் ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை.
    • இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ விளைவுகள் ஏற்படும்.

    மத்திய கிழக்குப் போர் தீவிரமடைந்துள்ளது. போர் காரணமாக உயிரிழப்புகள், பொருட்சேதம் ஒருபக்கம் ஏற்பட்டு வருகிறது. மறுப்பக்கம் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கம் தோண்டும் கப்பல்களை கொண்டு சுரங்கங்களை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கம் தோண்டுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், சுரங்கங்கள் வைத்திருப்பின் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத்-இல் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "எந்த காரணத்திற்காகவும் சுங்கங்கள் அமைக்கப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால், ஈரானுக்கு ராணுவ விளைவுகள் இதற்கு முன் கண்டிராத அளவில் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வட கொரியா- சீனா இடையிலான ரெயில் சேவை கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
    • வருகின்ற வியாழக்கிழமை முதல் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இநத ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும்.

    தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

    • ஹார்முஸ் ஜலசந்தி இரான் மற்றும் ஓமான் இடையே உள்ள மிகவும் குறுகிய கடல் பாதையாகும்.
    • இந்த பாதையை குவைத், கத்தார், UAE, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிகமாக பயன்படுத்துகின்றன.

    மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

    ஹார்முஸ் ஜலசந்தி என்றால் என்ன?

    இது இரான் மற்றும் ஓமான் இடையே உள்ள மிகவும் குறுகிய கடல் பாதை. அகலம் சுமார் 33 கி.மீ (21 miles) தான். உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாகும்.

    உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதையை குவைத், கத்தார், UAE, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிகமாக பயன்படுத்துகின்றன.

    ஹார்முஸ் ஜலசந்தியை இரான் முடக்கியாதா?

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் அவ்வழியே செல்லும் கப்பல்களை அவர்கள் நிறுத்தவில்லை. அதற்கு மாறாக அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு "இங்கு செல்லுவது அபாயம்" என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தார்கள். இதனால் கப்பல் கம்பெனிகள் இவவழியே செல்ல அச்சப்பட்டன.

    அந்த சமயத்தில் Lloyd's of London என்ற உலகின் மிக பழமையான கப்பல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு war-risk இன்சூரன்சை ரத்து செய்தார்கள்.

    இன்சூரன்ஸ் இல்லாமல் கப்பல் செல்ல முடியுமா என்றால் முடியாது. ஏன் என்றால் கடலில் கப்பல் விபத்து அல்லது தாக்குதல் நடந்தால், எண்ணெய் கசிவு நடந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதனால் கப்பல்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் சட்டப்படி பயணம் செய்ய முடியாது.

    அதாவது ஹார்முஸ் ஜலசந்தி இப்போதும் திறந்து தான் உள்ளது.ஆனால் அவ்வழியே செல்லும் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    பொதுவாக ஒரு நாளுக்கு 79 கப்பல்கள் சென்று வந்த இந்த பாதையில் இப்போது 7 கப்பல்கள் மட்டும் சென்று வருகிறது.

    கப்பல் இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு உயர்ந்தது?

    போருக்கு முன்னர் இன்சூரன்ஸ் தொகை கப்பல் மதிப்பில் 0.25% மட்டும் தான். ஆனாள் இப்போது ஒவ்வொரு வாரமும் கப்பல் மதிப்பில் 1% இன்சூரன்ஸ் கட்டவேண்டும். பல கப்பல் கம்பனிகளால் இந்த தொகையை சமாளிக்க முடியாது.

    இதன் தாக்கத்தால் நெதர்லாந்து கேஸ் விலை 52 சதவீதமும் இங்கிலாந்து கேஸ் விலை 48 சதவீதமும் ஆசியாவின் LNG விலை 39 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    உரங்களின் விலை உயரும் அபாயம்

    மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உரங்களின் உலகளாவிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உரங்களின் போக்குவரத்தில் 33% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் மேற்கொள்ளப்படுகிறது. கத்தார், ஈரான், UAE ஆகிய நாடுகள் உலகளாவிய அளவில் முக்கிய உர ஏற்றுமதி நாடுகளாகும்.

    உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் உரங்களை குறைவாக பயன்படுத்துவார்கள். இதனால் விளைச்சல் வெகுவாக குறைந்து உணவு விநியோகம் பாதிக்கப்படும். உலகளாவிய அளவில் உணவு பொருட்க்ளின் விலை அதிகரிக்கும். இந்த விளைவுகளை நாம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் கண்கூடாக பார்க்கலாம்.

    ×