search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலூதூக்குதல் போட்டி"

    • நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    ஜாம்ஷெட்பூர்:

    இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    ×