என் மலர்
நீங்கள் தேடியது "இடுப்பு விரிவடையும்"
- பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது.
- வயிற்றுப்பகுதி தளர்ந்து விடுவதால் ஸ்ட்ரேச் மாக்ஸ் ஏற்படுகிறது.
குழந்தை பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையை மட்டுமல்ல தாயின் உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு உயிரை வளர்க்க தன்னுள் இடம் கொடுப்பதால் பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது.
ஸ்ட்ரேச் மாக்ஸ்
தாயின் வயிற்றிற்குள் ஒரு குழந்தை ஒன்றல்ல, இரண்டல்ல 10 மாதங்கள் முழுமையாக வளர்கிறது. குழந்தை வளர வளர அதற்கு ஏற்ற அளவிற்கு பெண்ணின் வயிறும் வளர்கிறது. கர்ப்ப காலத்தில் விரிவடையும் தோலானது, குழந்தை பெற்ற பிறகு வயிற்றுப்பகுதி தளர்ந்து விடுவதால் அதில் வரிவரியாக ஸ்ட்ரேச் மாக்ஸ் ஏற்படுகிறது.
மார்பகத்தில் மாற்றம்
கர்ப்பம் தரித்த பெண்களின் மார்பக அளவு முன்பை விட இரண்டு மடங்கு அளவுகள் கூடுகிறது. இதற்கு காரணம் குழந்தை பெற்ற பிறகு, அதற்கான பால் உற்பத்தி அதிகரிப்பதால் மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பால் சுரக்கும் காலம் வரை மார்பகங்கள் பெரியதாக காணப்படும் அதன்பின்னர் தளர்ந்துவிடுகிறது.
கட்டுப்பாடு இல்லாமல் போதல்
குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்களது சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. இதனால் கர்ப்ப காலத்தைப் போலவே அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத உணர்வு போன்றவை ஏற்படும்.
வயிறு வீக்கம்
பிரசவத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் உடல் மாற்றங்களில் வயிற்று வீக்கம் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், வயிறு மற்றும் கருப்பை அளவு அதிகரிக்கத் தொடங்குவதால் வயிறு குழந்தை பிறந்த உடனேயே இயல்பு நிலைக்கு திரும்பாது. உடற்பயிற்சியின் மூலமே வயிற்று சதை பகுதியை இறுகச்செய்ய முடியும்.
இடுப்பு பகுதி விரிவடையும்
கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது, ஒரு பெண்ணின் எலும்பு அமைப்பும் மாறுகிறது. பிரசவித்தின் போது குழந்தையை உடலில் இருந்து வெளியே தள்ளுவதை எளிதாக்குவதற்கு இடுப்பு எலும்பு விரிவடைகிறது. எனவே, பல பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகு அவர்களின் இடுப்பு பகுதி விரிவடைந்து காணப்படும்.
முதுகு மற்றும் பிறப்புறுப்பு வலி
பிரசவ காலத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் முதுகு மற்றும் பிறப்புறுப்பில் வலியை அனுபவிக்கின்றனர். இது தற்காலிகமானது தான் என்றாலும், வலி தொடரும் பட்சத்தில் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
முடி உதிர்வு
பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு ஆகும். மகப்பேறுக்குப் பிறகு குழந்தையை கவனிக்கும் தாய்மார்கள், தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் சரியான ஊட்டச்சத்து இல்லாததால் அவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.






