search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist condemnation"

    • புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரேஷன்கடைகளை திறக்கக்கோரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு நியாயமான போராட்ட த்தில் ஈடுபட்டனர். துறை இயக்குனர் சக்திவேல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார். அதிகாரியின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிட ப்பட்டது.

    போராட்டத்தை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என காவல்துறை யினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளே காரணம். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூட்டமைப்பினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வழக்குப்பதிவு செய்து அவர்களின் போராட்ட உணர்வை முடக்க நினைப்பது ஒருபோதும் வெற்றி அடை யாது என்பதை அரசு உணரவேண்டும்.

    பெண்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடைகளை உடனே திறக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.
    • மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.

    அரசியல் அமைப்புச் சட்டம் 50 சதவீதம் வரையே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் பொருளாதார ரீதியான பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் நடை முறைப்படுத்தவில்லை.

    ஆகவே புதுவை மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கான இட ஒது க்கீட்டு அறிவிப்பை அதுவரை ரத்து செய்திட வேண்டும்

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறீயுள்ளார்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதில் அரசுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தகுதி பட்டியலை வெளியிடாமல் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் விதத்தில் புதுவை அரசு செயல்படுகிறது.

    கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், அரசுக்கு ண்டான 50 சதவீத சதவீத இடங்களை பெறுவதிலும் மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் தனியார் முதலாளிகளின் அசைவிற்கு ஏற்ப அரசு வளைந்து கொடுப்பது புதுவை மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    இனியும் காலம்தாழ்த்தா மல் உடனடியாக கல்விக் கட்டணத்தை மாணவர்கள் நலன் சார்ந்து நிர்ணயித்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீதம் இடங்களை பெற்று புதுவை அரசு தகுதி பட்டியலை வெளியிட வேண்டும்

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×