search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விண்ணப்பம் அளித்த சில நாட்களிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும்
    X

    தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    விண்ணப்பம் அளித்த சில நாட்களிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும்

    • தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை தாசில்தார் பிரதிவியை அவரது அலுவலத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது உப்பளம் தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே பொதுமக்கள் கஷ்டம் இல்லாமல் விண்ணப்பம் அளித்த சில நாட்களிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×