என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
இளையராஜாவுக்கு எம்.பி. பதவி நாட்டிற்கே கவுரவம்- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
- கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
- புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு அடிக்கடி வந்து மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அதுபோல் 3 நாள் பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் புதுவைக்கு நேற்று வந்தார். நேற்று காரைக்கால் மாவட்டத்துக்கு சென்ற அவர் அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு ஆஸ் பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
2-வது நாளாக இன்று புதுவையில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிககளில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.
கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. கடற்கரை சாலை தலைமை செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இசைஞானி இளைய ராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம். இளையராஜாவின் திறமையின் மூலமும், இசையின் சாதனைகள் மூலமும் நாட்டு மக்களை கட்டிப்போட்டவர்.
புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிபையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்