என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் மழையிலும் புதுவை கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்
    X

    கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்


    தொடர் மழையிலும் புதுவை கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

    • புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
    • அலைகள் சீற்றமாக இருந்ததால் கடலில் இறங்காமல் கரையில் இருந்தபடியே கடல் அழகை ரசித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    வியாழக்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை தொடங்குகிறது.இந்த வாரம் புதுவையில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் விடுதி அறைகளில் தங்க முன் பதிவு செய்த சுற்றுலா பயணிகள் அறைகளை ரத்து செய்தனர்.

    இருப்பினும், திட்டமிட்டபடி சில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர். அவர்கள் புதுவை கடற்கரை சாலையில் அதிகாலை முதலே கூடி கடல் அழகைரசித்தனர். லேசான தூறலை அனுபவித்தபடி செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மமகிழ்ந்தனர்.

    அலைகள் சீற்றமாக இருந்ததால் கடலில் இறங்காமல் கரையில் இருந்தபடியே கடல் அழகை ரசித்தனர். * * * கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

    Next Story
    ×