என் மலர்
புதுச்சேரி

புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
- புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஊருக்குள் வர தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாராவது வீடுகளில் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணரப்பேட்டை, லாஸ்பேட்டை பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
ரவுகளின் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?
ஊருக்குள் வர தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாராவது வீடுகளில் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வருவதால் ரவுடிகள் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். ரவுடிகள் யாராவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சோதனை மற்ற பகுதி ரவுகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.






