என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரியில் சாராயக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்
- கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு சந்தை தோப்பு எதிரில் சாராய கடை உள்ளது.
இந்த சாராய கடையை ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் நடத்தி வருகிறார். மர்மநபர்கள் 3 பேர் இரவில் சாராய கடைக்கு வந்தனர்.
அவர்கள் கடையில் பணியில் இருந்த காசாளரிடம் கடனுக்கு சாராயம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் சாராயம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காசாளரி டம் தகராறு செய்து அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து 3 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாராய கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். அந்த பெட்ரோல் குண்டு கடையின் முன்பு விழுந்து வெடித்து தீப்பிடித்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாராய கடை ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
மேலும் 3 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து திருபுவனை போலீசில் காசாளர் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்