என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

    • ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
    • பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை, கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் சசிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுவையில் அனைத்து பிரிவினருக்கும் தகுந்த அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தலின்பேரில் புதுவை அரசு ஆணையம் அமைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு எந்த விகிதத்தில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை, கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வீடுதோறும் சென்று தகவல், தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. வீடு தேடி ரும் கணக்கெடுப்பாளர்களிடம் பொதுமக்கள் தேவையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அரசியல் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் குறித்து ஆணையம் பரிந்துரைக்க உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×