search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதிதிராவிடர்களுக்கு நிதியை செலவிடாத அமைச்சர் பதவி விலக வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    ஆதிதிராவிடர்களுக்கு நிதியை செலவிடாத அமைச்சர் பதவி விலக வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

    • மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
    • புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2022 - 2023-ம் நிதியாண்டில் புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதை பயன்படுத்தி மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.

    ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் சுமார் ரூ.166 கோடியை புதுவை அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்களுக்கான துணைத்திட்ட நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் துணைத்திட்ட நிதி ரூ.925 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

    புதுவை அரசின் இத்தகைய தலித் விரோத போக்கு மாநிலத்தில் வாழும் 4 லட்சம் தலித் மக்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகம்.

    புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் இத்தகைய தலித் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான காரணத்தை விளக்க வேண்டும். தலித் மக்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் தனது ஏஜென்ட்கள் மூலம் குவிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கான நிதியை செலவிடுவதில் துளியும் ஈடுபாடு காட்டுவதில்லை.

    இந்த நிதி ஆண்டில் தலித் மக்களுக்கான துணை திட்ட நிதி சுமார் ரூ.166 கோடியை வீணடித்த துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பொறுப்பற்ற செயல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×