என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மலேரியா இல்லாத புதுவை சுகாதாரத்துறை வேண்டுகோள்
- இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது
- புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக நாடுகள் அனைத்திற்கும் இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக மலேரியா நோய் விளங்கி வருகிறது. புதுவையில் மூளையை தாக்கும் மலேரியா மிக குறைந்த அளவில் புதுவையில் தொற்று ஏற்படுகிறது. புதுவை சுகாதாரத்துறை இந்தியா விலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி உன்னதமான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.
2021-ம் ஆண்டு 5 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டனர். அதன்பின் ஒரு மலேரியா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, இந்திய அரசு நிர்ணயித்த மலேரியா இல்லாத புதுவை என்ற இலக்கை எட்டும் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் தேங்கும் நீர் நிலைகளை சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் கொசு உற்பத்தியை முற்றிலும் கட்டுப்படுத்தி மலேரியா நோயிலிருந்து நம்மை காப்போம் என உறுதிமொழி ஏற்போம். மலேரியா இல்லாத புதுவையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்