search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

    ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.
    • மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இடையஞ்சாவடி செல்லும் வழியில் அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பஞ்சலோக கருங்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் 9 நவஅக்னி குண்டங்களும், 12 பரிவார யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி முதல் 8 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. யாக பூஜையை அவிநாசி பிச்சை சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார்.

    கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது. 9 மணி முதல் 10.30 மணி வரை அம்மா புவனாம்பிகா முன்னிலையில், சர்வ சாதகம் சிவாகம பூசணம் கணேச சிவாச்சாரியார் தலைமையில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், சிவலிங்கம், மகாமேரு, சூரியன், சந்திரன், சப்தமாதா, லட்சுமி நாராயணன், சண்டிகேஸ்வரி உள்ளிட்ட பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று மதியம் 12 மணிக்கு மகா தீபம் நடந்தது.

    மாலை உற்சவர் உட்பிரகார வீதி உலாவும் நடக்க உள்ளது.

    மேலும் 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×