என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காந்தி திடலில் உயர்கல்வி கண்காட்சி
    X

    கோப்பு படம்.

    புதுவை காந்தி திடலில் உயர்கல்வி கண்காட்சி

    • அறிவியல், பாலிடெக்னிக், ஓட்டல் மேலாண்மை சார்ந்த படிப்புகளை சேர்ந்த 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
    • முருகபிரகாஷ், 21-ந் தேதி தனியார் பயிற்சி நிறுவன இயக்குனர் யோகி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுவை தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பகம் சார்பில் உயர் கல்வி கண்காட்சி காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் 21-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடக்கிறது. 6 முதல் 9 மணி வரை நடக்கும் கண்காட்சியில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஓட்டல் மேலாண்மை சார்ந்த படிப்புகளை சேர்ந்த 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    கண்காட்சியை முதல அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா உட்பட பலர் பங்கேற்கின்றனர். மேற்படிப்பு தொடர்பாக துறை வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். 19-ந் தேதி ஐ.ஐ.டி துறை தலைவர் ஹரிகிருஷ்ணன், 20-ந் தேதி புதுவை பொறியியல் கல்லூரி தலைவர் முருகபிரகாஷ், 21-ந் தேதி தனியார் பயிற்சி நிறுவன இயக்குனர் யோகி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×