search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோவில்லில் குதிரையேற்ற போட்டி தொடங்கியது- 40 வீரர்கள் பங்கேற்பு
    X

    ஆரோவில்லில் குதிரையேற்ற போட்டி தொடங்கியது- 40 வீரர்கள் பங்கேற்பு

    • டிரஸ்சேஜ் எனப்படும் ஒரே பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • தேசிய சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ஜூன் 16-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்துள்ள ஆரோவில்லில் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

    இந்த பயிற்சி பள்ளி புதுவை அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து முதல்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியை நடத்துகிறது. இந்த குதிரையேற்ற போட்டிகள் இன்று தொடங்கியது.

    வருகிற 26-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. நாள்தோறும் காலை 7 முதல் காலை 11 மணி வரை போட்டிகள் நடக்கிறது.

    போட்டியில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை மற்றும் ஆரோவில்லை சேர்ந்த தலைசிறந்த 40 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா, துருக்கி, செல்வேனியா மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பேர் நடுவர்களாக செயல்படு கின்றனர். டிரஸ்சேஜ் எனப்படும் ஒரே பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தேசிய சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ஜூன் 16-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.

    Next Story
    ×