என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தேர்வுகளை விரைவாக நடத்திவிடுமுறை அறிவிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Byமாலை மலர்5 April 2023 9:12 AM GMT
- புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
- பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகளவில் பொது மக்களை வாட்டி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.
கொரோனா நோய் தாக்கம் அதிகம் பரவி வருகிறது. பெற்றோர் மற்றும் மாணவர் நலனில் அக்கறை கொண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுகுறித்து முதல்- அமைச்சர், கல்வி அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X