search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுக்கடையில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து
    X

    கோப்பு படம்.

    மதுக்கடையில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து

    • தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
    • இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் புதுநகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வினோத் தவளக்குப்பத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தனது நண்பர் இளந்தமிழன் என்பவருடன் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே சண்முகம் அவரது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். வினோத்தும், இளந்தமிழனும் மது குடித்து கொண்டிருந்த போது அவர்களை பார்த்து சண்முகம் முறைத்து பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள மதுக்கடை அருகே வந்த போது அவர்களை சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் வழி மறித்தனர்.

    பின்னர் சண்முகமும், அவரது நண்பர்களும் தகாத வார்த்தைகளால் திட்டி வினோத்தையும், இளந்தமிழனையும் தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் பீர் பாட்டிலாலும் குத்தினர். அதோடு 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    மேலும் வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு வரவே சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத் மற்றும் அவரது நண்பர் இளந்தமிழன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து வினோத் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×