search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
    X

    கோப்பு படம்.

    வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

    • திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.
    • அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.

    இந்த நிலையில் புதுவை கதிர்காமம் செடலை முன்னிட்டு ஏழாத்தான் குளம் என்ற பகுதியில் ராட்டினம் அமைப்பதற்காக வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிஷோர் மற்றும் அவரது நண்பர் சாந்தகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களுக்கு தெரியாமல் எப்படி ராட்டினம் போடலாம் என கேட்டனர். அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து சாந்த குமார் ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் கிஷோர் கார்த்திக்கை குத்தினார்.

    எங்களை மீறி ராட்டினம் அமைத்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். ராட்டினம் அமைப்பவர்கள் திருப்பி தாக்கியதில் கிஷோர் மற்றும் சாந்த குமாருக்கு காயம் ஏற்பட்டது. பீர் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த தினேஷ் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமத்தித்தனர்.

    இதுகுறித்து எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×