என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கையில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம்
    X

    கோப்பு படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இலங்கையில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம்

    • இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையே புரட்டி போட்டது.
    • அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையே புரட்டி போட்டது.

    பெட்ரோல்,டீசல். கியாஸ் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள கொதித்து எழுந்ததால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே ஓடினார்.

    இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

    இதையடுத்து அவர் இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார், இலங்கைக்கு இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவி கரம் நீட்டி உள்ளது. ஆனாலும் அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை. விலைவாசியும் குறைந்த பாடில்லை.

    பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக அல்லாடி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    நேற்று அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பு கலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    கையில் பதாகையுடன் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்ககோரி கோஷம் போட்டனர். இதனால் பதட்டமான நிலை உருவானது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ஏற்கனவே கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பி உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் மறுபடியும் அரசியலில் நுழைய எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இதனால் அவருக்கு எதிராக போராட்டம் வெடிக்கலாம் என்ற நிலையில் தற்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×