கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதலில் 8 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது.80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதலில் 8 பேர் பலி
Published on

கிவ்:

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷிய படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இத்தாக்குதலில் குழந்தை உள்பட 8 பேர் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே டொனெட்ஸ்த் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதியான பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதியில் 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com