search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல் லெபனானுக்கு செல்கிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல் லெபனானுக்கு செல்கிறது

    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.
    • 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறை முகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல்கள் இன்று லெபனானுக்கு செல்கிறது.

    ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.

    இதையடுத்து உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.

    அதன் கீழ் உக்ரைனில் இருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ந்தேதி புறப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

    இதன் மூலம் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×