என் மலர்tooltip icon

    உலகம்

    சிரியா தலைநகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி
    X

    சிரியா தலைநகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி

    • இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மேலும் இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடை மறித்து அழிக்கப்பட்டதாக சிரியா தெரிவித்தது.

    Next Story
    ×