என் மலர்
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
- பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கம் அண்டை நாடான இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்து குஷ் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. இதனால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடான இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது. ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
Next Story






