என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பென்னாகரம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றம் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து குறைந்து நேற்று காலை மேலும் குறைந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×