search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்டம்- வாலிபர் தற்கொலை
    X

    ஆன்லைன் சூதாட்டம்- வாலிபர் தற்கொலை

    • தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 18 லட்சம் இழந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் பல்வேறு கோணத்தில் ஜெயராமனை நெருக்கடி செய்யவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் 18 லட்சத்தை இழந்து உள்ளேன் பணத்தை கட்டாவிட்டால் என்னை போலீசில் சிக்க வைத்து விடுவார்கள். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அவரது தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணியிலிருந்து ஜெயராமன் தனியாக யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார் கடைசியாக அவரது அண்ணனிடம். நான் ரெயிலில் அடிபட்டு சாகப் போகிறேன் என கூறிவிட்டு சரியாக 9.50 மணியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வந்தே பாரத் ரெயில் 15 நிமிடம் நின்றது. வந்தே பாரத் ரெயில் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ரெயில் கிளப்பி சென்னை நோக்கி சென்றார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராமன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×